×

அரசு பஸ் கண்டக்டருக்கு சரமாரி அடிஉதை போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: செங்குன்றத்தில் பரபரப்பு

புழல்: சென்னை செங்குன்றத்தில் இருந்து தடம் எண் 557 மாநகர பேருந்து நேற்று மதியம் கும்மிடிப்பூண்டிக்கு சென்றது. இந்த பஸ், செங்குன்றம், திருவள்ளூர் கூட்டுச் சாலையில் வந்துள்ளது. அப்போது பின்னாடி பைக்கில் வந்தவர்களுக்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பைக் ஓட்டிவந்தவர்கள் ஆத்திரம் அடைந்து, மாநகர பஸ்சை மறித்து பைக்கை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டரிடம் தகராறு செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், கண்டக்டர் பால்ராஜை (44) அடித்து உதைத்துவிட்டு தப்பிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த கண்டக்டரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதனிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்குன்றம் பஸ் நிலையத்தில் பணியில் இருந்த 50க்கும் மேற்பட்ட கண்டக்டர், டிரைவர்கள் உடனடியாக பஸ்களை ஆங்காங்ேக நிறுத்திவிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் செங்குன்றம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ‘கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்யவேண்டும்’ என்று கோஷங்கள் எழுப்பினர்.‘திருவள்ளூர் கூட்டு சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வுசெய்து கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்கிறோம்’ என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். …

The post அரசு பஸ் கண்டக்டருக்கு சரமாரி அடிஉதை போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: செங்குன்றத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Govt Bus ,Senguntram Bust ,Chennai ,Sengunram ,Kummidipoondi ,Senguntram Bustle ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...